துளிர்ப்பதும் பூப்பதும் பின் காய்ப்பதும்
காய்ந்தபின் உதிர்வதும் மீண்டும் துளிர்ப்பதும் என
இயந்திரமாய் என் வீட்டூ புங்கை மரம்.
உண்பதும் உறங்குவதும் குலைப்பதும்
மீண்டும் உண்பதும் உறங்குவதும் என
எப்போதும் சோம்பிக்கிடக்கும் என் வீட்டு நாய்
கூட்டலும் கழித்தலும் பெருக்கலுமாய் என் பொழுது
இதில்
இயற்கையின் நியதி மரத்துக்கும் நாய்க்கும் பொருந்தியிருக்க
நான் மட்டும் ஏன் விதிவிலக்காய்?