Saturday, 14 September 2019

இருக்கை ....

தூரத்து
வெளியில் 
செடிகளசையும்
அழகைப் பார்க்க
அது சொல்லும்
செய்தி கேட்க
ஜன்னலோர
இருக்கையையே
தேர்ந்தெடுத்த
நான்,

சுவரைப் பார்த்த
இருக்கை கிடைத்தபோது
அமைதியானேன்,

காந்தியின்
மூன்று முத்துக்களில்
ஒன்றையாவது
எடுத்து
அணிந்து கொள்ள
தீர்மானித்து.

சொல், சைகை
மொழியின்
இரண்டு கண்கள்.

இருந்தும்,

சைகையே
அர்தத்தின் நாடியாய்
பிரதானமாய் போகிறது,
மொழி கடத்தும்
செய்திக்கு.

படிப்பு பண்பு
கல்வி கலாச்சாரம்
இவை
இடையே
வந்தவைகளென
உறுதியிட்டு

தனது
புறத்தோற்றத்தை
புறந்தள்ளி
புறம் பேசுதலே
அகம்
அறமாக கருதும்
மானிட
முகங்களைவிட

தன்னுள்
புதைத்த
இரகசிங்களால்
கல்லாய்போன
கல்லாலான சுவரே
மேலெனக்கருதி !