நிலையாமையை
நிலைத்து
நித்தமும்
நினைவூட்டும்
தானியங்கி எரிவாயு
கூடம்.
நம்மை
தன்னில்
உள்வாங்கி
விரல்
சொடுக்கிய
வினாடியில்
விடைதெரியா
வாழ்க்கையின்
எச்சத்தை
வெளித் தள்ளி.
ஊர் கோடியின்
மயானத்தில்
அமைதியாய்
நின்றிருக்கும்
தகர கொட்டாய்
நகர
நெரிசலினிடையே
இடுக்கி கொண்டு
பிறவிப் பெருங்கடலை
நித்தமும் நீந்தும்
மானிட இனத்தின்
நிலையாமையின்
நினைவு சின்னமாய்
நிற்கிறது
இந்த
மின் இடுகாடு.