கைவலி கால்வலி
என்று என்றோ
ஆரம்பித்த வாழ்க்கை,
இன்று ,
தலைவலி பல்வலி
என
பலவலிகளடங்கியதாய்,
மன வலியையும்
சேர்த்து.
எங்குதான் வலிக்காதோ
என்று கல்லூரி
ஆசிரியை கேட்டபோது
வலித்ததுதான் மனது
லேசாக.
இருபத்தி ஐந்து
ஆண்டுகளுக்கு
பின்னும்
வலி கொண்ட
வாழ்க்கையே
பூரணமாய்.
நிற்க நடக்க
மருத்து
சிந்தனை
மறத்து
சிரிப்பு அற்று
கிடந்தே கிடப்பதே
உரிய உணர்வாய்
வாழ்க்கையின்
இயக்கத்தை
அர்த்தத்தை
கேள்விக் குறியாக்கி
தசை சதை
எலும்பு மஜ்ஜை
விரல் நகம்
என
முட்களாய் வலி
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
உருள,
உடல் மனம் ஆன்மா
மூன்றும்
நேர்க்கோட்டில்
இயைய மறுத்து
இயக்கமின்றி
சந்திர சூரிய
கிரகணமாய்
ராகு கேது
பிடியின்
இருள் கவிழ்ந்து
மரண
வலி நிறைந்த
வாழ்க்கையை
தினம் ஒரு
யுகமாய் கடக்க
சாதனை சாத்தானை
மனம் எங்கே கொள்ள?
என்று என்றோ
ஆரம்பித்த வாழ்க்கை,
இன்று ,
தலைவலி பல்வலி
என
பலவலிகளடங்கியதாய்,
மன வலியையும்
சேர்த்து.
எங்குதான் வலிக்காதோ
என்று கல்லூரி
ஆசிரியை கேட்டபோது
வலித்ததுதான் மனது
லேசாக.
இருபத்தி ஐந்து
ஆண்டுகளுக்கு
பின்னும்
வலி கொண்ட
வாழ்க்கையே
பூரணமாய்.
நிற்க நடக்க
மருத்து
சிந்தனை
மறத்து
சிரிப்பு அற்று
கிடந்தே கிடப்பதே
உரிய உணர்வாய்
வாழ்க்கையின்
இயக்கத்தை
அர்த்தத்தை
கேள்விக் குறியாக்கி
தசை சதை
எலும்பு மஜ்ஜை
விரல் நகம்
என
முட்களாய் வலி
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
உருள,
உடல் மனம் ஆன்மா
மூன்றும்
நேர்க்கோட்டில்
இயைய மறுத்து
இயக்கமின்றி
சந்திர சூரிய
கிரகணமாய்
ராகு கேது
பிடியின்
இருள் கவிழ்ந்து
மரண
வலி நிறைந்த
வாழ்க்கையை
தினம் ஒரு
யுகமாய் கடக்க
சாதனை சாத்தானை
மனம் எங்கே கொள்ள?