Wednesday, 6 May 2020

தடுமாறும் தொண்ணூறு..


தளர் நடை
வளர் தாடி
நடுங்கும் கைகள்
இடுங்கிய கண்கள்
வறண்ட பார்வை

இறுகிய முகம்
ஒடிங்கிய தேகம்
நடுங்கும் கால்கள்
கையில் பிரம்பு

பகல் வேளைகளின்
இருக்கையே
சில நேரங்களில்
படுக்கையாய்

வயதையும்
வறுமையின்
விரக்த்தியையும்
விஞ்சி நிற்கிறது
உயிர் வாழ்தலின்
தேவை.

சாதிக்கவோ
சுவாசிக்கவோ
ஏதுமில்லைதான்
இனி.

கட்டிய மனைவி
இரண்டடி
மரப் பலகையில்
ஒற்றை நாடியாய்
நடையற்று
கிடந்த பின்

அதிகமான
உயிர் வாழ்தலின்
தேவை

தானில்லா
உலகில்
தாயற்ற
குழந்தையாகி
விடுவாளோ
என்றுதான்.

Sunday, 29 March 2020

பிட்சை.

யாசித்தலின்
மறு பெயர்
பிட்சை..

யாசித்து
வருவதற்கும்
இறைஞ்சி
வேண்டுவதற்கும்
கேட்டு
பெருவதற்குமான
ஒன்று அல்ல
அன்பு.

ஊற்றாய்
பெருகி
உணர்வில்
கலந்து
நினைவில்
நித்தம்
நிற்பதே
நேசம்.

Thursday, 6 February 2020

வலியோடு வாழ்க்கை

கைவலி கால்வலி
என்று என்றோ
ஆரம்பித்த வாழ்க்கை,
இன்று ,
தலைவலி பல்வலி
என
பலவலிகளடங்கியதாய்,
மன வலியையும்
சேர்த்து.

எங்குதான் வலிக்காதோ
என்று கல்லூரி
ஆசிரியை கேட்டபோது
வலித்ததுதான் மனது
லேசாக.

இருபத்தி ஐந்து
ஆண்டுகளுக்கு
பின்னும்
வலி கொண்ட
வாழ்க்கையே
பூரணமாய்.

நிற்க நடக்க
மருத்து
சிந்தனை
மறத்து
சிரிப்பு அற்று
கிடந்தே கிடப்பதே
உரிய உணர்வாய்

வாழ்க்கையின்
இயக்கத்தை
அர்த்தத்தை
கேள்விக் குறியாக்கி

தசை சதை
எலும்பு மஜ்ஜை
விரல் நகம்
என
முட்களாய் வலி
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
உருள,

உடல் மனம் ஆன்மா
மூன்றும்
நேர்க்கோட்டில்
இயைய மறுத்து
இயக்கமின்றி

சந்திர சூரிய
கிரகணமாய்
ராகு கேது
பிடியின்
இருள் கவிழ்ந்து

மரண
வலி நிறைந்த
வாழ்க்கையை
தினம் ஒரு
யுகமாய் கடக்க

சாதனை  சாத்தானை
மனம் எங்கே கொள்ள?