நான்
இன்னும்
பற்பலவாய் யாசித்து
பல்லாயிரமாய் பிரிந்து
பிரளயமாயமானது
மனது.
கனவுகளில்
கோட்டை கட்டி
வானில் பறக்க
நாட்டையாள
கற்ற கல்வி
உற்று
உலகம் சுற்ற.
அவளாய் இவளாய்
பிடித்த பாத்திரத்தில்
தன்னைப் பொருத்தி
கற்பனையிலே
அரிதாரமெடுத்ததென்ன
"நின்று கொண்டு
கனவு காண்"
என்ற என்ற
போதனைைைய மீறி!
தூரம் தான்
வானம்
என்ற சொலவடை
தொடவில்லை
வானத்தை
தொட முடியவில்லை
வாழ்க்கையின்
வேகத்தை
பிடிபடாததால்,
அதற்கு
என்னைப்
பிடிக்காததால்.
இருப்பினும்
இச்சிறிய
காகிதம் தாங்கும்
எனது பெயர்
மழைத்துளி பட்ட
வேராய்
சிலிர்த்து
துளிர்கிறது.