Sunday, 29 March 2020

பிட்சை.

யாசித்தலின்
மறு பெயர்
பிட்சை..

யாசித்து
வருவதற்கும்
இறைஞ்சி
வேண்டுவதற்கும்
கேட்டு
பெருவதற்குமான
ஒன்று அல்ல
அன்பு.

ஊற்றாய்
பெருகி
உணர்வில்
கலந்து
நினைவில்
நித்தம்
நிற்பதே
நேசம்.

No comments:

Post a Comment