கிழிந்த செருப்பும்
அறுந்த செருப்பும்
வெவ்வேறுதான்.
இரண்டின்
நிலையும் வேறு
கதையும் வேறு.
சிலர் வாழ்க்கையும்.
சிலர் வாழ்க்கையும்.
அருந்த செருப்பிற்கு
எதிர்காலமுண்டு,
தைத்தால்.
கிழிந்த செருப்புக்கு
காலமே இல்லை.
தலை இழுத்தால் கால் தெரியும்
கால் இழுத்தால் தலை தெரியும்.
ஆமாம்,
செருப்பிற்கு
தலை ஏது
கால் எது ?
எது என்னவோ,
பற்றாக்குறைதான்,
இழுத்து தைக்க முடியாத
பற்றாக்குறைதான்.
பற்றாக்குறை
செருப்பிலுள்ள
தோலில் மட்டுமல்ல.
தோலில் மட்டுமல்ல.
பற்றாக்குறை
தோலிலான பையிலும்
தோல் மூடிய
மனதிலும்.
why this kolaveri
ReplyDelete