அந்த வீட்டின்
அகண்ட கூடத்தில்
ஆளுயுர நான்.
என் முழு நேர பணி
பிரதிபலிப்பதே ,
உருவத்தை மட்டுமல்ல.
குறுக்கும் நெடுக்குமாக
அவ்வீட்டில் மக்கள்
நடக்கும் போது
அறிந்தும் அறியாதது போல
அவர்கள் பார்வை
என் மேல்.
அநேக நேரங்களில்
தன் உருவ அமைப்பே
மனதில்
சிகை திருத்தி
மீசை முருக்கி
வகிடெடுத்து
மையிட்டு.
எத்தனை பேர்
எத்தனை நாள்
பார்வை
என் மேல் .
ஆனால்
என்னை ஒரு தரமேனும்
ஏறிட்டுப்
பார்க்காது
என் இருத்தலையும்
தன் இருத்தலையும்
உணராத
உருவம் அழகு
எண்ணங்கள்
வண்ணங்கள்
என
வாழ்க்கையின்
சாரமற்று
என்னையும்
சாரம் போனதாய்.
ஒரு முறையேனும்
ஏறெடுத்துப் பார்க்காத
அவளின்
மனதை
மட்டுமல்ல
முகத்தையும்
நானறியேன்.
அகண்ட கூடத்தில்
ஆளுயுர நான்.
என் முழு நேர பணி
பிரதிபலிப்பதே ,
உருவத்தை மட்டுமல்ல.
குறுக்கும் நெடுக்குமாக
அவ்வீட்டில் மக்கள்
நடக்கும் போது
அறிந்தும் அறியாதது போல
அவர்கள் பார்வை
என் மேல்.
அநேக நேரங்களில்
தன் உருவ அமைப்பே
மனதில்
சிகை திருத்தி
மீசை முருக்கி
வகிடெடுத்து
மையிட்டு.
எத்தனை பேர்
எத்தனை நாள்
பார்வை
என் மேல் .
ஆனால்
என்னை ஒரு தரமேனும்
ஏறிட்டுப்
பார்க்காது
என் இருத்தலையும்
தன் இருத்தலையும்
உணராத
உருவம் அழகு
எண்ணங்கள்
வண்ணங்கள்
என
வாழ்க்கையின்
சாரமற்று
என்னையும்
சாரம் போனதாய்.
ஒரு முறையேனும்
ஏறெடுத்துப் பார்க்காத
அவளின்
மனதை
மட்டுமல்ல
முகத்தையும்
நானறியேன்.